இமாசலப் பிரதேசத்தில் 6000 அரசுப் பள்ளிகள் 20-க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் பயின்று வருவதாக கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையின் அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், இமாச்சலப்பிரதேசத்தில் 18,028 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 15,313 பள்ளிகள் அரசு நடத்தும் பள்ளிகளாகும். 6,106 அரசுப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும், இதில் 5,113 தொடக்கப் பள்ளிகள் என்றும், 993 நடுநிலைப் பள்ளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, அரசுப் பள்ளிகளில் மொத்தமாக 65,973 ஆசிரியர்கள் உள்ளதாகவும், 1,779 பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும், 5,533 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், 2,969 பள்ளிகளில் ஒரு ஆசிரியரும், 12 அரசு தொடக்கப் பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 51 அரசு நடுநிலைப் பள்ளிகள் ஒரு ஆசிரியரும், 416 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், 773 பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும், 701 பள்ளிகளில் நான்கு முதல் ஆறு ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல், ஒரு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்களும், 10 பள்ளிகள் 3 ஆசிரியர்களும், 212 பள்ளிகளில் 4 முதல் 6 ஆசிரியர்களும், 710 பள்ளிகளில் 7 முதல் 10 ஆசிரியர்களும் பணியற்றி வருவதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.